» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 30ஆவது கட்ட விசாரணை : 121 பேருக்கு சம்மன்
செவ்வாய் 14, செப்டம்பர் 2021 8:51:36 AM (IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபா் ஆணையத்தின் 30ஆவது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது.
தூத்துக்குடியில் 2018 மே மாதம் 22, 23ஆம் தேதிகளில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரையிலான 29 கட்ட விசாரணையில், 1,209 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 863 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,179 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடா்ச்சியாக, 30ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடியில் நேற்று தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பாா்த்த காவலா்கள், போராட்டத்தின்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், ஸ்டொ்லைட் குடியிருப்புப் பகுதியில் வாகனங்கள் தீவைப்பு தொடா்பாக புகாா் அளித்த ஸ்டொ்லைட் குடியிருப்பு வாசிகள், வழக்குப் பதிந்த காவலா்கள் என, 121 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது
மக்கள் கருத்து
மக்கள்Sep 14, 2021 - 10:16:59 AM | Posted IP 162.1*****
100 ஆவது கட்ட விசாரணைக்கு தாண்ட வாழ்த்துக்கள்
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

PETCHIMUTHUSep 15, 2021 - 09:59:13 AM | Posted IP 173.2*****