» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அனுமதியின்றி 42 பனை மரங்களை வெட்டியவர் மீது வழக்கு
திங்கள் 13, செப்டம்பர் 2021 9:01:29 PM (IST)
சூரங்குடி பகுதியில் அரசு அனுமதியின்றி 42 பனை மரங்களை வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
100 வருடங்களுக்கு மேலாக நீண்ட நாட்களுக்கு பல்வேறு வகை பலன்களை தரக்கூடிய பனை மரங்கள் வெட்டப்பட்டு அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும், அதை பாதுகாத்து வளர்க்க வேண்டும் எனவும், அவற்றை வெட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தமிழ்நாட்டு மரங்களின் சின்னமாக பனை மரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்தையாபுரம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பனை மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, உரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து மகன் செல்வராஜ் என்பவர் சுமார் 42 பனை மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து பெரியசாமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பனை மரங்களை வெட்டிய செல்வராஜை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திற்பரப்பு அருவியில் குளிக்க 7 நாள்களுக்குப் பிறகு அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:34:28 AM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 29, நவம்பர் 2025 5:02:37 PM (IST)

குமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.65 லட்சம் வருவாய்!
வெள்ளி 28, நவம்பர் 2025 10:42:22 AM (IST)

மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்: கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
வியாழன் 27, நவம்பர் 2025 3:46:38 PM (IST)

குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று : 700 விசைப்படகுகள் கரைதிரும்பின
புதன் 26, நவம்பர் 2025 3:35:40 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 5பேர் கைது: 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
புதன் 26, நவம்பர் 2025 11:08:54 AM (IST)


.gif)
இயற்கை நேசிப்பவன்Sep 14, 2021 - 10:20:06 AM | Posted IP 108.1*****