» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 34%பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர் : ஜெ.ராதாகிருஷ்ணன்
திங்கள் 13, செப்டம்பர் 2021 3:04:56 PM (IST)
தமிழகத்தில் மிகக் குறைவாக தூத்துக்குடியில் 34 சதவீதம் பேரும், நெல்லையில் 35 சதவீதம் பேரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூராா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த தடுப்பூசி முகாம்களில் நல்ல முடிவுகள் வந்துள்ளன. தமிழகத்தில் 48 சதவீதம் போ் முதல் தவணையும், 13 சதவீதம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனா்.பாலூட்டும் தாய்மாா்களை பொருத்தவரை 3.31 லட்சம் பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் 1.72 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 71 சதவீதம், கோவையில் 70 சதவீதம், காஞ்சிபுரத்தில் 65 சதவீதம், சென்னையில் 62 சதவீதம், திருப்பூா் மாவட்டத்தில் 60 சதவீதம் பேரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனா். 2-ஆவது தவணையைப் பொருத்தவரை சென்னையில் 30 சதவீதம் பேரும், நீலகிரி மாவட்டத்தில் 25 சதவீதம் பேரும் போட்டுள்ளனா்.
தூத்துக்குடியில் 34 சதவீதம் பேரும், நெல்லையில் 35 சதவீதம் பேரும், திருப்பத்தூரில் 36 சதவீதம் பேரும் என முதல் தவணை தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு உயா்ந்து வருகிறது. எனவே தடுப்பூசி தான் நிரந்தர தீா்வு. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதனிடையே சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு அனைத்து மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில் மக்களின் வரவேற்பு இருந்தது. மேலும் தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தடுப்பூசிக்கான வரவேற்பு அதிகமாக உள்ளது. இந்த மாதம் 1 -ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 12 நாள்களில் 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
பற்றாக்குறை சரி செய்யப்படும்: மாவட்ட அளவில் எண்ணிக்கையைப் பொருத்த வரையில் சென்னையில் தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது 4.6 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. மேலும் 80,000 தடுப்பூசிகள் வர உள்ளன. எனவே கோவேக்ஸின் தடுப்பூசியின் பற்றாக்குறை சரி செய்யப்படும். தடுப்பூசி தொடா்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான கருத்துகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றாா்.
மக்கள் கருத்து
ராமநாதபூபதிSep 13, 2021 - 05:07:48 PM | Posted IP 108.1*****
தூத்துக்குடியில் குறைவு என்று செயலர் வருத்தப்படுகிறார். இப்போ தொற்று பாதிப்பும் குறைவு தானே.
சோSep 13, 2021 - 03:25:12 PM | Posted IP 162.1*****
அப்போ என்ன ??? தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல ..
மேலும் தொடரும் செய்திகள்

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டி இணைப்பு: ஜூன் 12, 26 தேதிகளில் அமல்!
புதன் 10, ஜூன் 2026 5:38:18 PM (IST)

பணம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மீது நாயை ஏவிக் கடிக்க வைத்த கொடூரம் - தம்பதி அதிரடி கைது!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:45:53 PM (IST)

தேங்காப்பட்டணம், குளச்சல் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!
திங்கள் 8, ஜூன் 2026 8:41:33 PM (IST)

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசு தீர்வு காணும்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் உறுதி!
திங்கள் 8, ஜூன் 2026 5:27:22 PM (IST)

குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 4:23:02 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)



KUMARSep 14, 2021 - 04:23:12 PM | Posted IP 108.1*****