» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் ரூ.28.31 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் : அமைச்சர் பெ.கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்
ஞாயிறு 12, செப்டம்பர் 2021 7:37:38 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.28.31 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் மற்றும் சிட்டி லேனிங் சென்டர் பணிகளுக்கு அமைச்சர் பெ.கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.28.31 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் மற்றும் சிட்டி லேனிங் சென்டர் அமைப்பதற்கான பூமி பூஜையில் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தலைமையில் இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகரங்கள் திட்டத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அம்பேத்கர் நகரில் ஸ்டெம் பார்க் மற்றும் சிட்டி லேனிங் சென்டர் அமைக்கப்பட உள்ளது.
இந்த பூங்காவின் 150 இருக்கைகள் கொண்ட மினி திரையரங்கம், 6ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு உபயோகமாக படிக்கும் பாடத்தினை இங்கு நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் அறிவியல் மண்டலம், ஆற்றல் மண்டலம், கணித மண்டலம், பொறியியல் மற்றும் பொருள் அறிவியல், விண்வெளி மண்டலம், பரிமாண மாதிரிகள், உட்புற கண்காட்சிகள், ஒரு கோளத்தில் அறிவியல் மெய்நிகர் கண்காட்சி ஆகியவை இந்த பூங்காவில் வடிவமைக்கப்பட உள்ளது. நமது பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் நகரின் சுற்றுப்பகுதியில் உள்ள அனைவருக்கும் இந்த பூங்கா பள்ளி, கல்லூரி மற்றும் உயர்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலை வகித்தார். மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன்சுரேஷ், உதவி செயற்பொறியாளர் சரவணன், வட்டாட்சியர் ஜஸ்டின், முக்கிய பிரமுகர்கள் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
kumarSep 13, 2021 - 07:03:03 AM | Posted IP 162.1*****
smart city thittathin moolam thoothukudiku pala nalla thittangalai valangivarum maththiya arasuku nandri....
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)

ஜூலை 25ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்!
வியாழன் 17, ஜூலை 2025 3:36:16 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)

அதெல்லாம் இருக்கட்டும்Sep 13, 2021 - 08:45:04 AM | Posted IP 108.1*****