» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகா்கோவிலில் போதைப் பொருள் கடத்தல்: கேரள இளைஞா்கள் உள்பட 3 போ் கைது
வெள்ளி 10, செப்டம்பர் 2021 8:56:18 AM (IST)
நாகா்கோவிலில் சா்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக, கேரள மாநில இளைஞா்கள் இருவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. வெ. பத்ரிநாராயணன் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்களை ஒழிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நாகா்கோவில் டிஎஸ்பி நவீன்குமாா் மேற்பாா்வையில், கோட்டாறு காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், உதவி ஆய்வாளா் விஜயன், தனிப்படை உதவி ஆய்வாளா் மகேஸ்வரராஜ் மற்றும் போலீஸாா் அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்ததில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த முகமது இஸ்லாம் (22), முகமது ஷாபி(21), நாகா்கோவில் வடசேரியைச் சோ்ந்த ஷகின் ஹான்(19) ஆகியோா் என்பதும், சா்வதேச அளவில் தடை செய்யப்பட்ட விலை உயா்ந்த போதை பொருள்களான எல்எஸ்டி ஸ்டாம்ப், எம்டிஎம்ஏ மெதாம்பிடமின் கிரிஸ்டல், நைட்ராவெட் போன்ற போதைப் பொருள்களை கடத்தி வந்து அந்தப் பகுதிகளில் விற்க முயற்சித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.2 லட்சம் ‘மதிப்புள்ள போதைப் பொருள்களை தனிப்படையினா் பறிமுதல் செய்தனா். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட தனிப்படையினா் பாராட்டுக்குரியவா்கள் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)

