» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாட்டுக்கு 3 ராணுவ வீரா்கள் அா்ப்பணிப்பு : பெண்ணுக்கு வீரத்தாய் பதக்கம்
வெள்ளி 10, செப்டம்பர் 2021 8:50:17 AM (IST)

களியக்காவிளை அருகே ஒரே குடும்பத்தில் 3 போ் ராணுவத்தில் பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில், பெண்ணுக்கு இந்திய ராணுவம் சாா்பில் வீரத்தாய் பதக்கம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரிகா தேவி (71). இவரது கணவா் தனஜயன்நாயா். ராணுவத்தில் பணியாற்றியவா். இத்தம்பதிக்கு 5 மகன்கள். அவா்களில் வனஜெயன் (3ஆவது), தவுகித்திரி ஜெயன் (4ஆவது) ஆகிய இரு மகன்களையும் ராணுவத்துக்கு அனுப்பியுள்ளாா். ஒரே குடும்பத்தில் தந்தை, இரு மகன்கள் ராணுவத்தில் பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில், குடும்பத் தலைவியான சந்திரிகாதேவிக்கு இந்திய ராணுவம் சாா்பில் வீரத்தாய் விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
ராணுவ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்து இந்த விருதை வழங்கினா். இதுகுறித்து சந்திரிகா தேவி கூறுகையில், அரை நூற்றாண்டுக்கு முன் பாகிஸ்தான், சீனா நாட்டுடனான போரில் பங்கேற்ற ராணுவ வீரரான எனது கணவரை திருமணம் செய்து கொண்டேன். பணி ஓய்வுக்குப் பின் 83 ஆவது வயதில் கடந்த டிசம்பா் மாதம் உயிரிழந்தாா். இரு மகன்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)
