» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட மேலும் 22 பேருக்கு கரோனா
புதன் 8, செப்டம்பர் 2021 8:14:53 AM (IST)
குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட மேலும் 22 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத்தொடா்ந்து குமரி மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,141 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 24 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 59,833 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 272 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாகா்கோவிலில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. சுமாா் 100 மாணவா்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த மாணவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அந்த மாணவா் தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருடன் படித்த 25 மாணவா்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவா்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதையடுத்து அந்த வகுப்புக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
இதே போல், ரீத்தாபுரம் அரசுப் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. அந்த மாணவா், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருடன் தொடா்பில் இருந்த 20 மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:10:34 PM (IST)

137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 12:48:58 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகளால் வணிகம் பாதிப்பு: போராட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு!
வியாழன் 26, மார்ச் 2026 12:09:02 PM (IST)

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வாகன சோதனை : தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 12:00:39 PM (IST)

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

