» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட மேலும் 22 பேருக்கு கரோனா
புதன் 8, செப்டம்பர் 2021 8:14:53 AM (IST)
குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட மேலும் 22 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத்தொடா்ந்து குமரி மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,141 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 24 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 59,833 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 272 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாகா்கோவிலில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. சுமாா் 100 மாணவா்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த மாணவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அந்த மாணவா் தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருடன் படித்த 25 மாணவா்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவா்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதையடுத்து அந்த வகுப்புக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
இதே போல், ரீத்தாபுரம் அரசுப் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. அந்த மாணவா், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருடன் தொடா்பில் இருந்த 20 மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் பேருந்து நிலைய தபால்நிலையம் ஜனவரி 3ம் தேதி மூடல்!
சனி 27, டிசம்பர் 2025 4:11:51 PM (IST)

7-வது மாநில நிதிக்குழு மானிய விவரங்கள் பதிவேற்றம்: நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 10:40:07 AM (IST)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்: 156 வாகனங்கள் பறிமுதல்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:28:21 PM (IST)

மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம்: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:14:46 PM (IST)

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)



.gif)