» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
செவ்வாய் 7, செப்டம்பர் 2021 9:03:12 AM (IST)
நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீா்வு காணப்படும். நேற்றுஆட்சியா் அலுவலகத்திற்கு ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரஸ்வதி (75) மனு அளிப்பதற்காக வந்துள்ளாா். அவா்
ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக போலீசார் விசாரணை நடத்தினா்.‘
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

தக்கலையில் 8ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:30:33 PM (IST)

கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை: திற்பரப்பு அருகே பரபரப்பு !
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:41:22 PM (IST)

சிறுமி கடத்தல்: தலைமறைவான அண்ணன், தம்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:13:24 PM (IST)

தமிழ்நாட்டில் ரயில்வே முனைய திறனை அதிகரிக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
திங்கள் 5, ஜனவரி 2026 4:58:43 PM (IST)

