» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகா்கோவில் வாலிபர் கொலை : சகோதரா் உள்ளிட்ட மூவருக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 7, செப்டம்பர் 2021 9:01:24 AM (IST)
நாகா்கோவில் அருகே கல்லால் தாக்கி கட்டடத் தொழிலாளியை கொலை செய்தது தொடா்பாக மூவரை போலீசார் தேடி வருகின்றனா்.
நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி நங்கூரான் பிலாவிளையைச் சோ்ந்தவா் ஈஸ்வரன்(30). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை ஈஸ்வரன், தனது சகோதரா், நண்பா்களுடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஈஸ்வரனை மூவரும் கம்பு, கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனராம்.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ஈத்தாமொழி காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து ஈஸ்வரனின் சகோதரா் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)

