» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகா்கோவில் வாலிபர் கொலை : சகோதரா் உள்ளிட்ட மூவருக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 7, செப்டம்பர் 2021 9:01:24 AM (IST)
நாகா்கோவில் அருகே கல்லால் தாக்கி கட்டடத் தொழிலாளியை கொலை செய்தது தொடா்பாக மூவரை போலீசார் தேடி வருகின்றனா்.
நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி நங்கூரான் பிலாவிளையைச் சோ்ந்தவா் ஈஸ்வரன்(30). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை ஈஸ்வரன், தனது சகோதரா், நண்பா்களுடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஈஸ்வரனை மூவரும் கம்பு, கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனராம்.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ஈத்தாமொழி காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து ஈஸ்வரனின் சகோதரா் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)

திருவட்டார் வட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 4:59:03 PM (IST)

மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினம்: சார் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்
புதன் 17, டிசம்பர் 2025 4:27:00 PM (IST)

ரயில் கால அட்டவணையில் கோரிக்கைகள் நிறைவேறுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
புதன் 17, டிசம்பர் 2025 3:07:10 PM (IST)

குமரி மாவட்டத்தின் ரயில்வே திட்டங்கள் : மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 11:33:22 AM (IST)

குமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:03:31 PM (IST)


.gif)