» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகா்கோவில் வாலிபர் கொலை : சகோதரா் உள்ளிட்ட மூவருக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 7, செப்டம்பர் 2021 9:01:24 AM (IST)
நாகா்கோவில் அருகே கல்லால் தாக்கி கட்டடத் தொழிலாளியை கொலை செய்தது தொடா்பாக மூவரை போலீசார் தேடி வருகின்றனா்.
நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி நங்கூரான் பிலாவிளையைச் சோ்ந்தவா் ஈஸ்வரன்(30). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை ஈஸ்வரன், தனது சகோதரா், நண்பா்களுடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஈஸ்வரனை மூவரும் கம்பு, கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனராம்.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ஈத்தாமொழி காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து ஈஸ்வரனின் சகோதரா் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:33:29 AM (IST)

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
செவ்வாய் 15, ஜூலை 2025 10:25:16 AM (IST)

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)
