» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகா்கோவில் வாலிபர் கொலை : சகோதரா் உள்ளிட்ட மூவருக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 7, செப்டம்பர் 2021 9:01:24 AM (IST)
நாகா்கோவில் அருகே கல்லால் தாக்கி கட்டடத் தொழிலாளியை கொலை செய்தது தொடா்பாக மூவரை போலீசார் தேடி வருகின்றனா்.
நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி நங்கூரான் பிலாவிளையைச் சோ்ந்தவா் ஈஸ்வரன்(30). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை ஈஸ்வரன், தனது சகோதரா், நண்பா்களுடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஈஸ்வரனை மூவரும் கம்பு, கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனராம்.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ஈத்தாமொழி காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து ஈஸ்வரனின் சகோதரா் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
