» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஓணம் பண்டிகை: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 21ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 19, ஆகஸ்ட் 2021 5:25:00 PM (IST)

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற 21ம்  தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு :  ஓணம் திருநாளினை முன்னிட்டு 21.08.2021 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

21.08.2021 அன்று மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2021 செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (11.09.2021) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 21.08.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த்  உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory