» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெட்ரோல் பங்கில் வெடிகுண்டு மிரட்டல் - ரவுடி கைது : மேலும் 2பேருக்கு போலீஸ் வலை!!
திங்கள் 2, ஆகஸ்ட் 2021 11:53:58 AM (IST)
பெட்ரோல் பங்கில் நாட்டு வெடிகுண்டு வீசப்போவதாக மிரட்டல் விடுத்த தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டனம் மெயின் ரோட்டில் பெட்ரோல் பல்க் உள்ளது. இங்கு குலசேகரபட்டனம் கருங்காலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சிவகிருஷ்ணன் (26), என்பவர் பம்ப் ஆப்பரேட்டராக வேலைபர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அங்கு 3பேர் பைக்கிற்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்து சிவகிருஷ்ணனை அரிவாளால் தாக்கியுள்ளனர். மேலும், நாட்டு வெடிகுண்டைக் காட்டி பெட்ரோல் பல்க்கை தரைமட்டமாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து குலசேகரபட்டனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி குலசேரபட்டனம் மாடாசாமிபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் முத்து மல்லிகாராஜ் (30) என்பவரை கைது செய்தார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சர்க்கார் மகன் லியோ (32), ராஜா மகன் ரமேஷ் 20 அகிய 2பேரை போலீசா் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மல்லிகாராஜ் மீது தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
AdminAug 2, 2021 - 11:59:18 AM | Posted IP 162.1*****