» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெட்ரோல் பங்கில் வெடிகுண்டு மிரட்டல் - ரவுடி கைது : மேலும் 2பேருக்கு போலீஸ் வலை!!

திங்கள் 2, ஆகஸ்ட் 2021 11:53:58 AM (IST)

பெட்ரோல் பங்கில் நாட்டு வெடிகுண்டு வீசப்போவதாக மிரட்டல் விடுத்த தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டனம் மெயின் ரோட்டில் பெட்ரோல் பல்க் உள்ளது. இங்கு குலசேகரபட்டனம் கருங்காலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சிவகிருஷ்ணன் (26), என்பவர் பம்ப் ஆப்பரேட்டராக வேலைபர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அங்கு 3பேர்  பைக்கிற்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்து சிவகிருஷ்ணனை அரிவாளால் தாக்கியுள்ளனர். மேலும், நாட்டு வெடிகுண்டைக் காட்டி பெட்ரோல் பல்க்கை தரைமட்டமாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதுகுறித்து குலசேகரபட்டனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி குலசேரபட்டனம் மாடாசாமிபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் முத்து மல்லிகாராஜ் (30) என்பவரை கைது செய்தார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சர்க்கார் மகன் லியோ (32), ராஜா மகன் ரமேஷ் 20 அகிய 2பேரை போலீசா் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மல்லிகாராஜ் மீது தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. 


மக்கள் கருத்து

AdminAug 2, 2021 - 11:59:18 AM | Posted IP 162.1*****

Photo Konjam Potta nalla erukkum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory