» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களிடம் கட்டாயமாக கரோனா பரிசோதனை

சனி 31, ஜூலை 2021 12:13:18 PM (IST)

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களிடம் கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் கரோனா தொற்று 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மத்திய-மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 1,859 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 28 பேர் பலியானார்கள். அதே சமயத்தில் குமரியில் குறைந்திருந்த பாதிப்பு, சற்று உயர்ந்துள்ளது. 22 வரை வந்த பாதிப்பு மீண்டும் 40-க்கு சென்றுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குமரி எல்லையை ஒட்டி உள்ள கேரளாவில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தை கடந்து கரோனா பாதிப்பு உள்ளது. அங்கு நேற்று முன்தினம் 22 ஆயிரத்து 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு கரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 585 ஆக உள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கரோனா தொற்று உயர்ந்து கொண்டே செல்கிறது. தேசிய அளவில் தினசரி பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் போது, கேரளாவில் 12.93 சதவீதமாக உள்ளது. கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், குமரி எல்லை பகுதியிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது குமரியில் பாதிப்பு அதிகரித்து வருவதற்கு, கேரளாவை சேர்ந்தவர்கள் இங்கு வருவதால் தான் என்ற கருத்து நிலவுகிறது.

ஏற்கனவே கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்களில் குமரிக்கு வரும் பயணிகளுக்கு சோதனை சான்றிதழ் இல்லை என்றால், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொண்ட பின்பு தமிழகத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகளுக்கு எவ்வித சோதனையும் மேற்கொள்ளாமல் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கேரளாவுக்கு சென்று குமரி மாவட்டம் திரும்புவதால், குமரியில் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களிடம் கட்டாயமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லை பகுதியை மூடவும் வலியுறுத்தி உள்ளனர். சோதனை சாவடி தவிர கேரளாவில் இ்ருந்து வருபவர்கள் வேறு எந்த பகுதிகள் வழியாக குமரி மாவட்டத்துக்குள் நுழைகிறார்கள் என்பதை அறிந்து, அங்கும் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory