» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பாதிரியார் ஜாமீன் மனு தள்ளுபடி!
சனி 31, ஜூலை 2021 12:08:57 PM (IST)
இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாதிரியார் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்பட 3 பேர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது, மத உணர்வுகளை புண்படுத்துதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்ததும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார்.
கடந்த 24-ம் தேதி வெளி மாவட்டத்திற்கு தப்பி செல்ல முயன்ற போது மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் மாஜிஸ்திரேட்டு, பாதிரியாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனால் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த வழக்கில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஆகிய 2 பேர் சார்பிலும் ஜாமீன் கேட்டு குழித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது, ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் ஸ்டீபன் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)
