» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு
சனி 31, ஜூலை 2021 12:04:01 PM (IST)
குமரியில் ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தைைய அதிகாரிகள் மீட்டனர்.
குமரி மாவட்டத்தில் செண்பகராமன்புதூர், ஆதிச்சன்புதூர் காலனியை சேர்ந்தவர் வசந்தகுமார் (30). இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதனால், அந்த சிறுமி கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.இந்த விவகாரம் தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அதன்பின்பு அந்த சிறுமி தனது குழந்தையுடன் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த குழந்தையை கருங்கல் அருகே பாலப்பள்ளம், ெநட்டாவிளைைய சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். குழந்தையை வாங்கிய 3-வது மாதத்தில் பால்ராஜின் மனைவி அருள் சகாயமேரி இறந்தார். இதையடுத்து அந்த குழந்தையை அருள்சகாய மேரியின் தங்கை கோணத்தை சேர்ந்த ஜான்சி பராமரித்து வந்தார்.
இந்தநிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த வசந்தகுமார் தனது குழந்தையை மீட்குமாறு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து கோணம் பகுதிக்கு சென்று ஜான்சியுடன் தங்கியிருந்த குழந்தையை மீட்டு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், குழந்தையின் தாயையும் அவரது உறவினர்களையும் வரவழைத்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

