» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை ஆக.2ம் தேதி தொடங்குகிறது

செவ்வாய் 27, ஜூலை 2021 11:55:56 AM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை வருகிற 2-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 12-ம் தேதி வரை நடக்கிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை வருகிற 2-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 12-ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு களப அபிஷேகம், 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை, பின்னர் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

adminJul 27, 2021 - 04:15:28 PM | Posted IP 103.1*****

இரவு என்பது தூங்குவதற்கான நேரம். அதை சரியாக கடைபிடிக்காத பொழுது உடல் நலத்தில் பிரச்சினை ஏற்படும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory