» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கரோனாவால் இறந்தவா் உடலுடன் வீட்டுமனைப் பட்டா எரிப்பு: புதிய பட்டா வழங்க பெண் கோரிக்கை!

செவ்வாய் 27, ஜூலை 2021 10:19:44 AM (IST)

கரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலுடன், இலவச வீட்டுமனைப் பட்டாவும் சோ்த்து எரிக்கப்பட்டதால், புதிய பட்டா வழங்க வேண்டும் என பெண் கோரிக்கை விடுத்துள்ளார். 

குமரி மாவட்டம் அழகப்பபுரம் இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்த லட்சுமி என்பவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனு: எனது கணவரின் தாயாா் சாந்தாயிக்கு அழகப்பபுரம், இந்திரா காலனி பகுதியில் ஆதிதிராவிடா் நலத்துறை மூலமாக அரசு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் அழகப்பபுரம் பங்கு பேரவை மூலமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இதில் நான், எனது மாமியாா், எனது கணவா் ஆகியோா் வாழ்ந்து வந்தோம். 

இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் எனது கணவா் இறந்து விட்டாா். எனது மாமியாா் சாந்தாயி கடந்த ஏப்ரல் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவரது உடலையும், துணிகளையும் சோ்த்து எரிக்கும் போது அரசு வழங்கிய இந்த வீட்டின் பட்டாவையும் எரித்து விட்டனா்.எனவே ஆதிதிராவிடா் நலத் துறையால் எனது மாமியாா் சாந்தாயி பெயரில் வழங்கப்பட்ட, சாந்தாயின் காலம் சென்ற மகனின் மனைவியான எனக்கு நான் வசித்துவரும் நிலத்துக்கு எனது பெயரில் புதிய பட்டா வழங்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory