» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாளையங்கோட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேரை கைது

செவ்வாய் 22, ஜூன் 2021 4:48:19 PM (IST)

பாளையங்கோட்டை பகுதியில் பயங்கர ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவருக்கு சொந்தமான ஆட்டோ இரவு நேரங்களில் தெற்கு பஜார் சாலைகளில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம் கடந்த 20-ஆம் தேதி ஆட்டோவை வழக்கமான இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவீட்டு மீண்டும் காலையில் ஆட்டோவை பார்த்தபோது கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப் பட்டிருந்தது தெரியவந்தது

இதுதொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர் இதில் இரண்டு இருசக்கர வாகனத்தில் 6 ர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்வது தெரியவந்தது.

இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், பிரேம் மற்றும் இசக்கி தாஸ் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory