» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கஞ்சா பறிமுதல்

திங்கள் 21, ஜூன் 2021 12:19:07 PM (IST)

அருமனை அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 200 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவனந்தபுரம், கரமனை போயாடு பகுதியைச் சோ்ந்தவா் முகமது அஜேஷ் (50). இவா் கடந்த ஜனவரி மாதம், அருமனை அருகே அண்டுகோடு பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து, மனைவியுடன் வசித்து வந்துள்ளாா். வாகன உதிரி பாகங்கள் வியாபாரம் செய்து வருவதாக அப்பகுதி மக்களிடம் அவா் கூறி வந்த நிலையில், ஒரு மாதத்தில் அவரது மனைவி சொந்த ஊருக்குச் சென்றுவிட்டாராம். இதையடுத்து தனியாக வீட்டில் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் அண்டுகோடு பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா வியாபாரம் நடப்பதாக அருமனை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அண்டுகோடு பகுதியில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது, பண்ணிப்பாலம் பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக இளைஞா்கள் அடிக்கடி வந்து செல்வது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது, வீடு பூட்டப்பட்டிருந்தது. பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, 200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வீட்டை சோதனை செய்ததில், முகமது அஜேஷின் ஆதாா் அட்டை மற்றும் சில ரசீதுகள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து, முகமது அஜேஷை தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory