» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஸ்டெர்லைட் ஆலையில் 69.22 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி - ஆட்சியர் தகவல்
ஞாயிறு 20, ஜூன் 2021 9:39:24 PM (IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று மாலை 6.00 மணி நிலவரப்படி 69.22 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனும், 588 NM3 (84 உருளை) வாயு ஆக்சிஜனும் உற்பத்தி செய்யப்பட்டது.
இத தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று (20.06.2021) மாலை 6.00 மணி நிலவரப்படி 69.22 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் மற்றும் 588 NM3 (84 உருளை) உற்பத்தி செய்யப்பட்டு, 49 உருளை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 7 மெட்ரிக் டன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 4.22மெட்ரிக் டன் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 4.22மெட்ரிக் டன் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 10.94மெட்ரிக் டன் மதுரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும்,
1.75 மெட்ரிக் டன் தென்காசி அரசு மருத்துவமனைக்கும், 11.31 மெட்ரிக் டன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 8 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 8.04மெட்ரிக் டன் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 35 உருளைகள் தென்காசி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 4.58மெட்ரிக் டன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், 4.58மெட்ரிக் டன் கருர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 4.58மெட்ரிக் டன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ப. சுகுமார்Jun 21, 2021 - 04:41:07 AM | Posted IP 173.2*****