» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோவில்பட்டியில் 109 வயது மூதாட்டி மரணம்
செவ்வாய் 18, மே 2021 8:25:25 AM (IST)
கோவில்பட்டியில் 109 வயது மூதாட்டி மரணம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள மூப்பன்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஐவ ராசா தேவர். இவர் மின்வாரியத்தில் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுப்பம்மாள் (109). இவர்களுக்கு 9 மகன்கள், ஒரு மகள். பேரன்- பேத்திகள், பூட்டன்-பூட்டிகள் என்று 44 பேர் உள்ளனர். ஐவராசாத் தேவர் 1992-ம் ஆண்டு இறந்தார். சுப்பம் மாள் தனது கணவர் பென்சன் பணத்தை பெற்றுக் கொண்டு, பிள்ளை களுடன் வாழ்ந்து வந்தார்.நேற்று காலை 11 மணி யளவில் சுப்பம்மாள் மரணம் அடைந்தார். மாலையில் இறுதி சடங்கு எளிமையாக நடந்தது.
அட்மின்மே 18, 2021 - 09:27:12 AM | Posted IP 108.1*****