» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோவில்பட்டியில் 109 வயது மூதாட்டி மரணம்

செவ்வாய் 18, மே 2021 8:25:25 AM (IST)

கோவில்பட்டியில் 109 வயது மூதாட்டி மரணம் அடைந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள மூப்பன்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஐவ ராசா தேவர். இவர் மின்வாரியத்தில் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுப்பம்மாள் (109). இவர்களுக்கு 9 மகன்கள், ஒரு மகள். பேரன்- பேத்திகள், பூட்டன்-பூட்டிகள் என்று 44 பேர் உள்ளனர். ஐவராசாத் தேவர் 1992-ம் ஆண்டு இறந்தார். சுப்பம் மாள் தனது கணவர் பென்சன் பணத்தை பெற்றுக் கொண்டு, பிள்ளை களுடன் வாழ்ந்து வந்தார்.நேற்று காலை 11 மணி யளவில் சுப்பம்மாள் மரணம் அடைந்தார். மாலையில் இறுதி சடங்கு எளிமையாக நடந்தது.


மக்கள் கருத்து

அட்மின்மே 18, 2021 - 09:27:12 AM | Posted IP 108.1*****

எளிமையாக. மிக சிறப்பு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory