» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1030 பேருக்கு கரோனா: 12 போ் பலி
திங்கள் 17, மே 2021 10:36:15 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில், மேலும் 1030 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், மேலும் 1030 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று வெளியான பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 98 ஆயிரத்து 546 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 1030 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 32,794 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 310 போ் குணமடைந்ததை தொடா்ந்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 25,184 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 12 போ் உயிரிழந்ததால், கரோனா பலி எண்ணிக்கை 451 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 7,159 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.