» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில்- கோவை திருச்சி, மதுரை- திருவனந்தபுரம் உள்ளிட்ட 5 ரயில்கள் ரத்து
புதன் 31, மார்ச் 2021 3:51:26 PM (IST)
மதுரை அருகே இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 4 ரயில்களை பகுதியாக தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
மதுரை அருகே இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை- திருநெல்வேலி, திருநெல்வேலி- சென்னை இரு மார்க்கத்திலும் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக 4 ரயில்களை பகுதியாக தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
1. ரயில் எண்: 02628, திருவனந்தபுரம்- திருச்சி சிறப்பு ரயில் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
2. ரயில் எண்:02627, திருச்சி- திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இன்று கொடைக்கானல் ரோடு- திருவனந்தபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
3. ரயில் எண்: 06321/ 06322 நாகர்கோவில்- கோவை- நாகர்கோவில் சிறப்பு ரயில், திருநெல்வேலி- திண்டுக்கல்- திருநெல்வேலி இடையே இன்று பகுதி ரத்து செய்யப்படுகிறது.
4.ரயில் எண்: 06343 திருவனந்தபுரம்- மதுரை சிறப்பு ரயில், திண்டுக்கல்- மதுரை இடையே நேற்று ரத்து செய்யப்பட்டது.
5. ரயில் எண்: 06344 மதுரை- திருவனந்தபுரம் சிறப்பு ரயில், மதுரை- திண்டுக்கல் இடையே மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
6. ரயில் எண்: 06072 திருநெல்வேலி தாதர் சிறப்பு ரயில் இன்று திருவனந்தபுரம், ஷோரனூர் வழியாக மாற்றிவிடப்படுகிறது.
7. ரயில் எண்:06340 நாகர்கோவில்- மும்பை சிறப்பு ரயில் திருவனந்தபுரம்- ஷோரனூர் வழியாக இன்று திருப்பிவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் மழை நீடிப்பு- பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 3:49:18 PM (IST)

கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் : சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:13:09 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)

நகை பட்டறையில் 37½ பவுன், ரூ.1¼ லட்சம் கொள்ளை : மாயமான ஊழியருக்கு வலைவீச்சு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:01:14 AM (IST)

நாகா்கோவிலில் விபத்து: மருத்துவா், செவிலியா் பலி
வெள்ளி 9, ஏப்ரல் 2021 10:22:44 AM (IST)

குமரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல்வைப்பு ஆட்சியர் மா.அரவிந்த், தகவல்
புதன் 7, ஏப்ரல் 2021 5:15:04 PM (IST)
