» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு : மேலும் 2பேர் உயிரிழப்பு
சனி 27, மார்ச் 2021 12:15:38 PM (IST)
குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 17,396 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உயர்ந்து வருகிறது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 331 ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சுற்றுலா வந்த பயணிகளில் 75 வயது மூதாட்டி ஒருவர் திடீரென இறந்தார். அவருக்கு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. குமரியில் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த 60 வயது ஆண் நேற்று பிற்பகலில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்ட பூமத்திவிளை தெங்கன்குழியைச் சேர்ந்த 77 வயது பெண்ணும் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 333 ஆக உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனா். இதனிடையே தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 14 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16994 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 140 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் மழை நீடிப்பு- பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 3:49:18 PM (IST)

கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் : சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:13:09 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)

நகை பட்டறையில் 37½ பவுன், ரூ.1¼ லட்சம் கொள்ளை : மாயமான ஊழியருக்கு வலைவீச்சு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:01:14 AM (IST)

நாகா்கோவிலில் விபத்து: மருத்துவா், செவிலியா் பலி
வெள்ளி 9, ஏப்ரல் 2021 10:22:44 AM (IST)

குமரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல்வைப்பு ஆட்சியர் மா.அரவிந்த், தகவல்
புதன் 7, ஏப்ரல் 2021 5:15:04 PM (IST)
