» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் - முதல்வர் மீது மு.க.ஸ்டாலின் தாக்கு
சனி 6, பிப்ரவரி 2021 3:33:20 PM (IST)
அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல முதல்வர் செயல்பட்டு வருகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 29 ஆம் தேதி முதல் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. ஊழல் ஆணையமாக மாறி உள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், " பிற மாநிலத்தவரை இறக்குமதி செய்யும் ஆணையமாக டி.என்.பி.எஸ்.சி. செயல்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி. மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. ஊழல் வழக்கில் கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட சாதாரண பணிகளில் உள்ளவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. ஊழலில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். 25 ஆண்டுகால கட்சிப் பணிகளுக்கு பிறகே சட்டமன்றம் சென்றேன். முதல்வர் இன்னும் பல அறிவிப்புகளை வெளியிடுவார்; ஆனால் விவசாயிகள், மக்கள் ஏற்க மாட்டார்கள். அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல முதல்வர் செயல்பட்டு வருகிறார். முதல்வர் பேச்சை அமைச்சர்கள் கேட்பதில்லை. தமிழகத்தில் அரைகுறை ஆட்சி நடக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு: காதலன் தூக்குப் போட்டு தற்கொலை
ஞாயிறு 7, மார்ச் 2021 8:46:38 AM (IST)

அமித்ஷா நாளை குமரி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி ஆய்வு
சனி 6, மார்ச் 2021 5:05:19 PM (IST)

குமரி மக்கள் எனக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை அளிப்பார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!
சனி 6, மார்ச் 2021 4:24:23 PM (IST)

குமரியில் பறக்கும் படை வாகன சோதனை: ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது
சனி 6, மார்ச் 2021 12:41:55 PM (IST)

குமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளராக பொன் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
சனி 6, மார்ச் 2021 12:27:23 PM (IST)

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு
சனி 6, மார்ச் 2021 10:43:27 AM (IST)
