» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காதல் கணவர் இறந்த துக்கத்தில் புதுப்பெண் தற்கொலை : திருமணமான 8 மாதத்தில் சோகம்
சனி 6, பிப்ரவரி 2021 8:38:14 AM (IST)
அருமனை அருகே திருமணமான 8 மாதத்தில், காதல் கணவர் இறந்ததால், துக்கம் தாங்காமல் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமரி மாவட்டம், அருமனை அருகே அம்பலகடையில் வசித்து வருபவர் உஷா. இவருடைய மகள் அபிஷா (வயது 19). இவர் மார்த்தாண்டம் அருகே ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது குலசேகரம் அருகே செருப்பாலூர் என்ற இடத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் சிவா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்த தம்பதிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் சிவா தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பிறகு அபிஷா தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். ஆசை, ஆசையாக காதலித்து திருமணம் செய்த கணவரை இழந்த சோகத்தில் அவர் இருந்து வந்தார். இந்தநிலையில் துக்கம் தாங்காமல் அபிஷா தாய் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தாய் உஷா அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலை என்ற விபரீத முடிவை தேடி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு: காதலன் தூக்குப் போட்டு தற்கொலை
ஞாயிறு 7, மார்ச் 2021 8:46:38 AM (IST)

அமித்ஷா நாளை குமரி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி ஆய்வு
சனி 6, மார்ச் 2021 5:05:19 PM (IST)

குமரி மக்கள் எனக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை அளிப்பார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!
சனி 6, மார்ச் 2021 4:24:23 PM (IST)

குமரியில் பறக்கும் படை வாகன சோதனை: ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது
சனி 6, மார்ச் 2021 12:41:55 PM (IST)

குமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளராக பொன் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
சனி 6, மார்ச் 2021 12:27:23 PM (IST)

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு
சனி 6, மார்ச் 2021 10:43:27 AM (IST)
