» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியி்ல் ஜன.14-ல் கிராமியக் கலைப் பயிற்சி
ஞாயிறு 10, ஜனவரி 2021 9:44:22 AM (IST)
தூத்துக்குடியி்ல் வருகிற 14ம் தேதி பொங்கல் பண்டிகையன்று தமிழன்டா கலைக்கூடம் சார்பில் கிராமியக் கலைப் பயிற்சி நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் வரும் தை பொங்கல் தினத்தன்று, 14ஆம் தேதி தமிழன்டா கலைக்கூடம் நடத்தும் தமிழ் கிராமியக்கலைப் பயிற்சி நடைபெற இருக்கிறது. தூத்துக்குடி சிதம்பர நகர் சந்தை வளாகத்தில் உள்ள தமிழன்டா கலைக்கூடத்தில் காலை 7 மணிக்கு தாரை தப்பட்டை முழங்கத்துடன் விழா தொடங்குகிறது. இதில், சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம்,கோலாட்டம், களியலாட்டம், வீதி நாடகப் பயிற்சி, கரகம், காவடி போன்ற கிராமியக் கலைகள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிலம்பு செல்வம், மேகலிங்கம் போன்றோர் பயிற்சி வழங்குகின்றனர். மாரி பறையாட்டம் கற்றுக்கொடுக்கிறார். சிலம்பம் கலையை மாரியப்பன், யோகா கலையை சுந்தரவேல், பாரம்பரிய கலையை பாக்ஸர் லெட்சுமண மூர்த்தி போன்ற பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுக்கின்றனர். அனைத்து பயிற்சிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. முன்பதிவு அவசியம். இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள கலைஞர்கள் – பயிற்சியாளர்கள் "தமிழன்டா கலைக்கூடம், 97917 80068, 98650 97664 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வரும் தை பொங்கல் தினத்தன்று, 14ஆம் தேதி தமிழன்டா கலைக்கூடம் நடத்தும் தமிழ் கிராமியக்கலைப் பயிற்சி நடைபெற இருக்கிறது. தூத்துக்குடி சிதம்பர நகர் சந்தை வளாகத்தில் உள்ள தமிழன்டா கலைக்கூடத்தில் காலை 7 மணிக்கு தாரை தப்பட்டை முழங்கத்துடன் விழா தொடங்குகிறது. இதில், சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம்,கோலாட்டம், களியலாட்டம், வீதி நாடகப் பயிற்சி, கரகம், காவடி போன்ற கிராமியக் கலைகள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிலம்பு செல்வம், மேகலிங்கம் போன்றோர் பயிற்சி வழங்குகின்றனர். மாரி பறையாட்டம் கற்றுக்கொடுக்கிறார். சிலம்பம் கலையை மாரியப்பன், யோகா கலையை சுந்தரவேல், பாரம்பரிய கலையை பாக்ஸர் லெட்சுமண மூர்த்தி போன்ற பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுக்கின்றனர். அனைத்து பயிற்சிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. முன்பதிவு அவசியம். இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள கலைஞர்கள் – பயிற்சியாளர்கள் "தமிழன்டா கலைக்கூடம், 97917 80068, 98650 97664 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகஜீவன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது!
வியாழன் 21, ஜனவரி 2021 11:21:36 AM (IST)

போலீஸ் சீருடையில் காரை வழிமறித்து ரூ.76¼ லட்சம் கொள்ளை: 5 பேர் கும்பல் கைது
வியாழன் 21, ஜனவரி 2021 8:41:49 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,67,627 வாக்காளர்கள் : 54,518 பேர் புதிதாக சேர்ப்பு... 7826 பேர் நீக்கம்..!!
புதன் 20, ஜனவரி 2021 5:10:19 PM (IST)

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது : நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. பேட்டி
புதன் 20, ஜனவரி 2021 9:01:41 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் 2 பிரிவுகளாக நடைபெறும் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 19, ஜனவரி 2021 12:39:33 PM (IST)

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு: இரும்பு கதவை துளைத்துச் சென்ற தோட்டா!
திங்கள் 18, ஜனவரி 2021 12:49:43 PM (IST)

kumarJan 10, 2021 - 06:52:24 PM | Posted IP 173.2*****