» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் அருகே எம்பி வீட்டின் முன்பு வெடிகுண்டு : போலீசார் தீவிர விசாரணை - பரபரப்பு
செவ்வாய் 24, நவம்பர் 2020 3:32:36 PM (IST)

நாகர்கோவில் அருகே எம் பி விஜயகுமார் வீட்டில் வெடி குண்டு கிடந்ததை ஒட்டி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் மேல்சபை எம்பி விஜயகுமார் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இவருடைய வீட்டின் முன்பு சம்பவத்தன்று வெடி குண்டு இருந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக சோதனை செய்தனர்.
போலீசார் வெடி குண்டை கைப்பற்றி வெடி குண்டு குறித்து அதன் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் போட்டியோ அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது செய்திருப்பார்களா என்றும் தீவிரமாக விசாரணையை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். எம் பி வீட்டின் முன்பு வீசப்பட்ட வெடி குண்டால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது!
வியாழன் 21, ஜனவரி 2021 11:21:36 AM (IST)

போலீஸ் சீருடையில் காரை வழிமறித்து ரூ.76¼ லட்சம் கொள்ளை: 5 பேர் கும்பல் கைது
வியாழன் 21, ஜனவரி 2021 8:41:49 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,67,627 வாக்காளர்கள் : 54,518 பேர் புதிதாக சேர்ப்பு... 7826 பேர் நீக்கம்..!!
புதன் 20, ஜனவரி 2021 5:10:19 PM (IST)

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது : நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. பேட்டி
புதன் 20, ஜனவரி 2021 9:01:41 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் 2 பிரிவுகளாக நடைபெறும் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 19, ஜனவரி 2021 12:39:33 PM (IST)

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு: இரும்பு கதவை துளைத்துச் சென்ற தோட்டா!
திங்கள் 18, ஜனவரி 2021 12:49:43 PM (IST)
