» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரயில் டிக்கெட் விற்ற ஏஜென்சி உரிமையாளர் கைது!
செவ்வாய் 24, நவம்பர் 2020 12:11:49 PM (IST)
தக்கலை அருகே ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரயில்வே டிக்கெட்டை விற்ற டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே பருத்தி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மரிய கிளாட்சன் (44), இவர் அழகியமண்டபம் பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இங்கு ரயில், பஸ், விமான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து விற்று வருகிறார். இவரது ஏஜென்சியில் சட்டவிரோதமாக ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாக நாகர்கோவில் ரயில்வே மத்திய பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார் வந்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில் ரயில்வே போலீசார் அந்த ஏஜென்சியில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கிருந்த 2 கணினிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அதில் ஆன்லைனில் பல்வேறு போலி கணக்குகள் தொடங்கி, அதன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து போலீசார், ஏஜென்சி உரிமையாளர் மரிய கிளாட்சனை கைது செய்தனர். மேலும் அங்கு சட்டவிரோதமாக முன்பதிவு செய்து விற்பனைக்காக வைத்திருந்ததாக 21 ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது!
வியாழன் 21, ஜனவரி 2021 11:21:36 AM (IST)

போலீஸ் சீருடையில் காரை வழிமறித்து ரூ.76¼ லட்சம் கொள்ளை: 5 பேர் கும்பல் கைது
வியாழன் 21, ஜனவரி 2021 8:41:49 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,67,627 வாக்காளர்கள் : 54,518 பேர் புதிதாக சேர்ப்பு... 7826 பேர் நீக்கம்..!!
புதன் 20, ஜனவரி 2021 5:10:19 PM (IST)

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது : நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. பேட்டி
புதன் 20, ஜனவரி 2021 9:01:41 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் 2 பிரிவுகளாக நடைபெறும் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 19, ஜனவரி 2021 12:39:33 PM (IST)

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு: இரும்பு கதவை துளைத்துச் சென்ற தோட்டா!
திங்கள் 18, ஜனவரி 2021 12:49:43 PM (IST)
