» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொரோனா பரிசோதித்த வியாபாரிகள் வெளியே நடமாடினால் நடவடிக்கை : ஆணையர் எச்சரிக்கை
சனி 4, ஜூலை 2020 1:42:00 PM (IST)
கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த அனைத்து வியாபாரிகளுக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் தங்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்திய பிறகும் வடசேரி சந்திப்பில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம் செய்ததால் ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் கடைகளை அப்புறப்படுத்தினர். மேலும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு: இரும்பு கதவை துளைத்துச் சென்ற தோட்டா!
திங்கள் 18, ஜனவரி 2021 12:49:43 PM (IST)

செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சனி 16, ஜனவரி 2021 9:14:30 AM (IST)

குமரியில் தொடர் மழை: திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சனி 16, ஜனவரி 2021 9:12:23 AM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை: நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:43:23 PM (IST)

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:23:32 PM (IST)

பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகா்கள் வாக்களிப்பாா்கள்: எல். முருகன்
செவ்வாய் 12, ஜனவரி 2021 11:39:55 AM (IST)
