» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புறத்தொடர்பு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
வியாழன் 17, மே 2018 6:03:28 PM (IST)
புறத்தொடர்பு பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்டஆட்சியர் தெரிவித்ததாவது:- கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில், மாதம் ரூ.8,000 தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு 10-ம் அல்லது 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பதோடு ஒரு வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இத்தகைய தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாதிரி விண்ணப்ப படிவத்தை www.kanyakumari.tn.nic.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்கள்; புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை 28.05.2018 அன்று மாலை 5.30 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் - 629 001. என்ற முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்
சனி 23, பிப்ரவரி 2019 12:46:56 PM (IST)

நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 12:24:07 PM (IST)

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 11:48:53 AM (IST)

ரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்
சனி 23, பிப்ரவரி 2019 11:18:15 AM (IST)

மார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்
சனி 23, பிப்ரவரி 2019 10:56:42 AM (IST)

பொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 7:16:09 PM (IST)
