» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மோடியின் அமெரிக்க வருகையை பைடன் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்: ஜான் கிர்பே
செவ்வாய் 6, ஜூன் 2023 3:28:47 PM (IST)
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையை அதிபர் பைடன் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார் என பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பே தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பே, நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம். புதுடில்லிக்குச் செல்லும் எவரும் அதைத் தாங்களாகவே பார்க்க முடியும். பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு மேற்கொள்ள இருக்கும் அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்பை முன்னோக்கி கொண்டு செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியா சென்ற அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஸ்டின், சில கூடுதல் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டதை நீங்கள் அறிவீர்கள். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மோசமான பொருளாதார வர்த்தகம் உள்ளது. இந்தியா ஒரு பசிபிக் குவாட் உறுப்பினர்; இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரத்தில் முக்கிய நண்பர் மற்றும் பங்குதாரர்.
அமெரிக்காவுக்கு இந்தியா ஏன் முக்கியம் என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. நம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு என்பது இருதரப்பு மட்டுமல்ல, பலதரப்பு மற்றும் பல நிலைகளைக் கொண்டது. எல்லா பிரச்சனைகளைப் பற்றி பேசவும், கூட்டாண்மை மற்றும் நட்பை முன்னேற்றவும் ஆழப்படுத்தவும் அமெரிக்கா விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வருவதை, அதிபர் பைடன் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்." இவ்வாறு ஜான் கிர்பே தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் காசாவுக்கு ஆதரவாக போராட்டம் : 65 மாணவர்கள் சஸ்பெண்ட்
ஞாயிறு 11, மே 2025 10:29:53 AM (IST)

இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து: 6 வீரர்கள் உயிரிழப்பு
சனி 10, மே 2025 5:21:00 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு சமுகத் தீர்வு காண வேண்டும் : சீனா வலியுறுத்தல்!
சனி 10, மே 2025 12:22:37 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சனி 10, மே 2025 12:01:16 PM (IST)

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)
