» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எகிப்து கடற்கரையில் சுறா தாக்கி 2 பெண்கள் பலி!

திங்கள் 4, ஜூலை 2022 10:40:30 AM (IST)



எகிப்து நாட்டின் செங்கடல் கடற்கரையில் சுறா தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.

எகிப்து நாட்டின் ஹூர்ஹடா மாகாணம் செங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரையில் தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில், ஹூர்ஹடா மாகாணத்தில் உள்ள ஷஹல் ஹஹ்ரீஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். 

அப்போது, கடற்கரையில் குளித்துக்கொண்டிந்த 2 பெண்களை சுறா தாக்கியது. சுறா தாக்கியதில் படுகாயமடைந்த 2 பெண்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால், அந்த 2 பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த 2 பெண்களும் ஆஸ்திரேலியா, ரூமெனியா நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory