» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியப் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் செப். 24ல் சந்திப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு
செவ்வாய் 21, செப்டம்பர் 2021 10:27:41 AM (IST)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி செப்டம்பர் 24ம் தேதி சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ள 'க்வாட்' அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் அமெரிக்க புறப்படுகிறார். இதில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்துவார் என முன்பு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் வெள்ளை மாளிகை இதனை உறுதிபடுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை அமெரிக்க அதிபர் பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாகத் தலிபான் அரசு அறிவிப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 10:33:45 AM (IST)

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காபி குடிப்பது போன்ற வீடியோ போலி: க்ரூக் ஏஐ தகவல்!
திங்கள் 16, மார்ச் 2026 5:53:38 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: நேட்டோ அமைப்பின் எதிர்காலத்திற்கு ட்ரம்ப் விடுத்த கெடு!
திங்கள் 16, மார்ச் 2026 5:03:06 PM (IST)

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: தமிழக பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு!
திங்கள் 16, மார்ச் 2026 8:12:24 AM (IST)

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி: பதிலடி கொடுத்த வடகொரியா!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:25:22 AM (IST)

ஈரான் உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
சனி 14, மார்ச் 2026 12:45:28 PM (IST)

