» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குளோனிங் தொழில்நுட்பத்தில் மம்மூத் யானைகள் : ரூ.110 கோடியில் புதிய முயற்சி

சனி 18, செப்டம்பர் 2021 12:28:13 PM (IST)



பல்லாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யாணைகளை ரூ.110 கோடியில் குளோனிங் தொழில்நுட்பத்தில் மீண்டும் உருவாக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பனிபடர்ந்த மிகவும் குளிரான பிரதேசங்களில் ‘மம்மூத்’ எனப்படும் அடர்த்தியான‌ ரோமங்களுடனும், பிரமாண்ட‌மான வளைந்த தந்தங்களுடனும் உயரமான‌ யானைகள் வாழ்ந்தன. காலப்போக்கில் அழிந்து போன இந்த யானையின் புதிய படிவங்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவில் மம்மூத்தின் முழு உடலுமே கிடைத்தது. இதனால், ‘குளோனிங்’ முறையில் மீண்டும் இந்த யானைகளை உருவாக்க, கடந்த சில ஆண்டுகளாக‌ ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  

உயிரி அறிவியல் மற்றும் மரபியல் நிறுவனமான கொலோசல், தொழில் முனைவோர் பென் லாம் மற்றும் ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் மரபியல் பேராசிரியரான ஜார்ஜ் சர்ச் உள்ளிட்டோர் இணைந்து, ரூ.110  கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.இதற்கு, சைபீரியாவில் கிடைத்துள்ள  மம்மூத் யானையின் புதைபடிமங்களில் இருந்து மரபணுக்கள் சேகரிக்கப்பட்டு, தற்போது இந்த இனத்தை போன்ற தோற்றத்தை கொண்டுள்ள ஆசிய‌ யானைகளின் மரபணுவுடன் இணைத்து கருவாக மாற்றப்படும். அது, செயற்கை கருப்பையில் வைக்கப்பட்டு மம்மூத் யானை உருவாக்கப்படும் என சர்ச் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory