» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜெர்மனியில் பிப்.14 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு : அதிபர் அங்கேலா மேர்க்கெல் அறிவிப்பு
புதன் 20, ஜனவரி 2021 5:20:53 PM (IST)
ஜெர்மனியில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிப்ரவரி 14 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் புதியவகை கரோனா வேகமாகப் பரவி வருவதால் ஜெர்மனியில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாட்டு மக்களிடையே பேசிய அதிபர் அங்கேலா மேர்க்கெல், அச்சுறுத்தும் வகையில் கரோனா தொற்று பரவி வருவதால் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.
முன்னதாக 16 மாகாண ஆளுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மேர்க்கெல் பிரிட்டனில் இருந்து பரவிய புதிய வகை கரோனா தொற்று ஜெர்மனியில் பரவியுள்ளதைத் தொடர்ந்து பொதுமுடக்க கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார். ஜெர்மனியில் இதுவரை 47,622 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ரோவர் சோதனை ஓட்டம் வெற்றி
ஞாயிறு 7, மார்ச் 2021 9:09:15 AM (IST)

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் நாடுகள் மறுப்பு: விலை உயரும் அபாயம்
சனி 6, மார்ச் 2021 3:47:36 PM (IST)

நியூசிலாந்தில் தொடர்ந்து 4 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்
வெள்ளி 5, மார்ச் 2021 11:51:08 AM (IST)

ஹஜ் பயணம் வருபவர்களுக்கு கரோனா தடுப்பூசி சான்று கட்டாயம் : சவுதி அரசு அறிவிப்பு
வியாழன் 4, மார்ச் 2021 10:28:19 AM (IST)

நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கரோனா அதிகரிக்கிறது : உலக சுகாதார நிறுவனம் தகவல்
வியாழன் 4, மார்ச் 2021 8:29:39 AM (IST)

அரசு ஆதரவு பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்:ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
புதன் 3, மார்ச் 2021 12:17:05 PM (IST)
