» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன : சித்தராமையா குற்றச்சாட்டு

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:25:51 PM (IST)

காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந்தேதி உத்தரவிட்டது.

தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடப்பட்டு உள்ளது. இதனால் பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் பற்றி மைசூரு நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-அமைச்சர் சித்தராமையா, இது மிக துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. காவிரி விவகாரத்தில் பா.ஜ.க. மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு எதிர்க்கட்சிகளும் அரசியல் விளையாட்டில் ஈடுபடுகின்றன.

இது வெறும் அரசியலுக்காகவே நடத்தப்படுகிறது. கர்நாடக மக்களுக்காக அல்ல என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். அவர் தொடர்ந்து, மழை குறைவாக இருக்கும்போது இரு மாநிலங்களில் நீர் பங்கீடு பற்றி ஒரு தெளிவான தீர்வுக்கான வழிமுறையை சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவேரி நீர் மேலாண் கழகம் இணைந்து கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory