» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒரே நேரத்தில் பிளேடால் கையை அறுத்துக் கொண்ட 14 மாணவிகள்: டாஸ்க் விபரீதம்!!!
திங்கள் 18, செப்டம்பர் 2023 11:31:07 AM (IST)
கர்நாடகத்தில் டாஸ்க் என்ற பேரில், 14 மாணவிகள் தங்களது கைகளை பிளேடல் அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் தண்டேலி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர், தங்கள் கைகளை பிளேடால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. அந்த பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 14 பேர் ஒரே சமயத்தில் கைகளை பிளோடல் அறுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து அறிந்ததும் பள்ளி நிர்வாகத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சே்ாத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், தண்டேலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதுபற்றி போலீசார், சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது டாஸ்க் அடிப்படையிலான விளையாட்டு ஒன்றை அவர்கள் விளையாடியதும், அப்போது அதில் கூறப்பட்டதுபடி ஒரே நேரத்தில் 14 மாணவிகளும் தங்களது கைகளை பிளேடல் அறுத்துக் கொண்டதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிஹாரில் ஊடுருவல்காரர்களை எங்கள் அரசு வெளியேற்றும்: அமித் ஷா பிரச்சாரம்
சனி 25, அக்டோபர் 2025 5:38:13 PM (IST)

காவல்துறையினர் தொடர் பாலியல் வன்கொடுமை: கையில் எழுதி வைத்து மருத்துவர் தற்கொலை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:07:52 PM (IST)

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:50:43 PM (IST)

ஆந்திராவில் பஸ் தீவிபத்தில் 20பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:39:54 AM (IST)

பீகார் சட்ட சபை தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:24:12 PM (IST)

திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)


.gif)