» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
சனி 28, ஜனவரி 2023 10:16:44 AM (IST)
சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வாரத்துக்கு 5 நாள் வேலை, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.30, 31 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக வங்கி ஊழியர்கள், சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், மும்பையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வேலைநிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும், 31-ம் தேதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.