» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசு தின விழாவில் பஞ்சாப் அலங்கார ஊர்தி நிராகரிப்பு: முதல்வர் கண்டனம்
வெள்ளி 27, ஜனவரி 2023 12:10:32 PM (IST)
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின தேசிய அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் பகவந்த் மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் பகவந்த் மான் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர் பேசியதாவது: டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின தேசிய அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது கெட்ட நோக்கத்தின் வெளிப்பாடு. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது. பஞ்சாப்புக்கு எதிரான இந்த பாரபட்சமான அணுகுமுறை, தேவையற்றது, விரும்பத்தகாதது. பஞ்சாப்பின் பங்களிப்பு இல்லாமல் எந்த தேசிய தினம் கொண்டாடுவதையும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.