» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

லாலுவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிறைவு: தேஜஸ்வி யாதவ் தகவல்

திங்கள் 5, டிசம்பர் 2022 4:34:16 PM (IST)



ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அவரது மகனும் பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

பிகார் முன்னாள் முதல்வர், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அவரது மகள் ரோஷ்னி ஆச்சார்யா தனது தந்தைக்கு சிறுநீரகத்தைத் தானம் கொடுக்க முன்வந்த நிலையில், அவருக்கு இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனது தந்தையும், மூத்த சகோதரியும் தற்போது நலமாக இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார். 

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு லாலு ஐசியுக்கு மாற்றப்பட்டுள்ளார். எனது தந்தைக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி மற்றும் நல்வாழ்த்துகள். மருத்துவமனையில் தனது தந்தையை அழைத்துவரும் விடியோவையும் அவர் சுட்டுரையில் பகிர்ந்துள்ளார்.  கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் பிகார் முன்னாள் முதல்வர் பிரசாத், உடல் நலக் காரணங்களுக்காக நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory