» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை : ராகுலுடன் இணைந்த பிரியங்கா
வியாழன் 24, நவம்பர் 2022 10:40:49 AM (IST)

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி இணைந்துள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைப்பயணம் மேற்கொண்டார்.
குஜராத் பயணம் முடிவடைந்த நிலையில், நேற்று காலை (நவம்பர் 23) மத்தியப் பிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியப் பிரதேசத்துக்குள் நடைப்பயணம் மேற்கொண்டார். மத்தியப் பிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியப் பிரதேசத்தில், ராகுல்காந்தி 12 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார்.
அங்கு 380 கி.மீ. தூரம் நடைப்பயணம் செல்ல இருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்தியப் பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று (நவம்பர் 24) மீண்டும் தொடங்கியது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதோரா ஆகியோர் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ராவும் யாத்திரையில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)

மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சனி 13, செப்டம்பர் 2025 12:51:08 PM (IST)

ஜக்கி வாசுதேவ் போன்ற போலி வீடியோ உருவாக்கி பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடி!
சனி 13, செப்டம்பர் 2025 12:30:17 PM (IST)

தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்
சனி 13, செப்டம்பர் 2025 12:06:12 PM (IST)
