» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி
திங்கள் 26, செப்டம்பர் 2022 4:36:39 PM (IST)
லக்னோவில் 46 பக்தர்கள் பயணித்த டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயம் அடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நவராத்திரியின் முதல் நாளில் வழிபாடு செய்வதற்காக, சந்திரிகா தேவி கோவிலுக்கு பயணிகள் சென்று கொண்டிருந்தனர். பக்ஷி கா தலாப் என்ற பகுதியில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்ததாகவும், மேலும் குளத்தில் மூழ்கியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. விபத்தில் சிக்கிய பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.