» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம்!
திங்கள் 4, ஜூலை 2022 10:20:04 AM (IST)
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார்.
பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்று உள்ளார். தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் அவர் தனது மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவியின் வீட்டில் தங்கியிருக்கிறார். பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்படும் அவர் சிகிச்சையும் பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று வீட்டில் அவர் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. எனவே அதில் கட்டு போடப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக கோளாறு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சைக்கு செல்வதற்காக திட்டமிட்டிருந்த நிலையில், படிக்கட்டில் தவறி விழுந்து காயமடைந்திருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
INDIANJul 4, 2022 - 04:29:31 PM | Posted IP 162.1*****