» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம்!

திங்கள் 4, ஜூலை 2022 10:20:04 AM (IST)

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார்.

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்று உள்ளார். தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் அவர் தனது மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவியின் வீட்டில் தங்கியிருக்கிறார். பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்படும் அவர் சிகிச்சையும் பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று வீட்டில் அவர் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. 

உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. எனவே அதில் கட்டு போடப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக கோளாறு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சைக்கு செல்வதற்காக திட்டமிட்டிருந்த நிலையில், படிக்கட்டில் தவறி விழுந்து காயமடைந்திருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


மக்கள் கருத்து

INDIANJul 4, 2022 - 04:29:31 PM | Posted IP 162.1*****

KARMA IS STARTED

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory