» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கார்த்தி சிதம்பரத்தை 30ம் தேதி வரை கைது செய்ய தடை: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 26, மே 2022 3:45:10 PM (IST)
கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ. சம்மனை ஏற்று கார்த்தி சிதம்பரம் நேற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார்.
இன்று காலை 8 மணிக்கு கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்ஜாமீன் மீதான அடுத்தகட்ட விசாரணை மே 30ம்தேதி நடைபெறும் என நிதிபதி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 4, ஜூலை 2022 10:28:50 AM (IST)

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம்!
திங்கள் 4, ஜூலை 2022 10:20:04 AM (IST)

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை: திருவனந்தபுரம் அருகே சோகம்!
சனி 2, ஜூலை 2022 5:46:56 PM (IST)

டெல்லியில் இருந்து ஜபல்பூர் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை: பயணிகள் பீதி!!
சனி 2, ஜூலை 2022 4:48:33 PM (IST)

உதய்பூர் படுகொலையில் கைதானவர் பாஜக உறுப்பினர்: காங்கிரஸ் புகார் - பாஜக மறுப்பு!
சனி 2, ஜூலை 2022 3:44:12 PM (IST)

அக்னிபாதை திட்டத்தில் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
சனி 2, ஜூலை 2022 12:00:55 PM (IST)
