» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை: அரசியல் தலைவர்கள் கண்டனம்
வியாழன் 26, மே 2022 10:24:46 AM (IST)
காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை அம்ரீனா பட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படுகாயம் அடைந்த இருவரும் சதுராவில் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு ஸ்ரீநகரில் உள்ள SMHS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அம்ரீனா பட் உயிரிழந்தார். சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 லஷ்கர் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக ஜம்மு போலீசார் தெரிவித்தனர். அம்ரீனா டிக்டோக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களிலும் பிரபலமானார்.
இந்த கொலைக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில், "தீவிரவாதிகளின் தாக்குதலால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் ஏற்பட்டுள்ளது... அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளை இப்படி தாக்குவதை எந்த விதத்தாலும் நியாயப்படுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார். இவரைப் போலவே பல தலைவர்களும் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 4, ஜூலை 2022 10:28:50 AM (IST)

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம்!
திங்கள் 4, ஜூலை 2022 10:20:04 AM (IST)

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை: திருவனந்தபுரம் அருகே சோகம்!
சனி 2, ஜூலை 2022 5:46:56 PM (IST)

டெல்லியில் இருந்து ஜபல்பூர் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை: பயணிகள் பீதி!!
சனி 2, ஜூலை 2022 4:48:33 PM (IST)

உதய்பூர் படுகொலையில் கைதானவர் பாஜக உறுப்பினர்: காங்கிரஸ் புகார் - பாஜக மறுப்பு!
சனி 2, ஜூலை 2022 3:44:12 PM (IST)

அக்னிபாதை திட்டத்தில் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
சனி 2, ஜூலை 2022 12:00:55 PM (IST)
