» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அவைக்கு வராவிட்டால் மாற்றங்கள் வந்து சேரும்: பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!
புதன் 8, டிசம்பர் 2021 12:15:18 PM (IST)
பா.ஜ.க. எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தவறாமல் வரவேண்டும். இல்லையென்றால் உரிய நேரத்தில் மாற்றங்கள் வந்து சேரும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார்.
அம்பேத்கர் சர்வதேச மையத்தின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி பாஜக உறுப்பினர்கள் பலர் அவைக்கு ஒழுங்காக வருவதில்லை. இப்பொழுது நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாஜக எம்பிக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளத் தவறும் எம்பிக்கள் உரிய நேரத்தில் மாற்றத்துக்கு ஆட்படுவார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். பாரதிய ஜனதா கட்சி தனது எம்பிக்களின் கூட்டத்தை நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
கூட்டத்தில் பாரதிய ஜனத ஜனதா கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற கூட்டங்களை தவறாது கலந்துகொள்ள வேண்டும். தங்கள் தொகுதிகளில் அவர்கள் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் இதன் மூலம் இளைஞர்கள் பொதுமக்கள் மத்தியில் சுலபமாக அணுக முடியும் என்று பிரதமர் கூறியதாக மத்திய நாடாளுமன்ற அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சனி 13, செப்டம்பர் 2025 12:51:08 PM (IST)

ஜக்கி வாசுதேவ் போன்ற போலி வீடியோ உருவாக்கி பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடி!
சனி 13, செப்டம்பர் 2025 12:30:17 PM (IST)

தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்
சனி 13, செப்டம்பர் 2025 12:06:12 PM (IST)

பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி: தீபாவளி பரிசாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:02:06 PM (IST)

இந்தியாவின் 15-வது துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:52:07 AM (IST)

உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:44:57 AM (IST)
