» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளாவில் 1 முதல் 7ஆம் வகுப்புகளுக்கு அக்.1-ல் பள்ளிகள் திறப்பு : பினராயி விஜயன் அறிவிப்பு
வியாழன் 23, செப்டம்பர் 2021 10:43:50 AM (IST)
கேரளாவில் 1-ம் தேதி முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ம் தேதி முதல், 1 முதல் 7 வரை மற்றும் 10, 12-ம் வகுப்புகள் தொடங்கப்படும். 15-ம் தேதி முதல் மற்ற வகுப்புகள் ஆரம்பமாகும். இதையொட்டி பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் பள்ளி குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்படும். முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது.
வியாபார நிறுவனங்கள், பொது இடங்களில் சிலர் முக கவசம் அணியாமல் இருப்பது தெரிய வந்தால் தண்டிக்கப்படுவார்கள். கேரளாவில் இதுவரை 3.44 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 24 லட்சம் பேர் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட எடுத்து கொள்ளவில்லை. கொரோனா பாதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 65 வயதிற்கு மேலானவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)


.gif)