» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜெய்ப்பூரில் நீட் தேர்வு வினாத்தாள் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை: முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது
செவ்வாய் 14, செப்டம்பர் 2021 5:20:29 PM (IST)
ஜெய்ப்பூரில் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெய்பூரில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வு தொடங்கியதும் தேர்வறை கண்காணிப்பாளரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர், வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் தங்கியிருந்த 2 பேருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளனர்.
அந்த நபர்கள் சிகார் பகுதியில் வேறு சிலருக்கு வினாத்தாளை அனுப்பி, அவர்கள் மூலம் சரியான விடைகளைப் பெற்றுள்ளனர். அங்கிருந்து முகேஷுக்கு விடைகள் கிடைக்க, அதனை வாட்ஸ்-அப் மூலம் பெற்ற ராம் சிங் தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு விடைகளைத் தெரிவித்துள்ளார். இதற்காக ரூ.35 லட்சம் பேரம் பேசப்பட்டு, தேர்வுமைய வளாகத்திலேயே 10 லட்ச ரூபாய் கைமாறியுள்ளது. இதையடுத்து தேர்வு மைய அதிகாரி, மாணவி உட்பட 8 பேரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சித்தூர் மேயர், கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:15:32 PM (IST)

சிறுவர்களை சிறைபிடித்த வெப் சீரிஸ் இயக்குநர் சுட்டுக்கொலை: மும்பையில் பரபரப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:15:28 AM (IST)

இளைஞர்கள், மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை: கேரள முதல்வர் அறிவிப்பு
வியாழன் 30, அக்டோபர் 2025 5:49:22 PM (IST)

மாபெரும் ஆளுமை முத்துராமலிங்கத் தேவர் - பிரதமர் மோடி புகழஞ்சலி
வியாழன் 30, அக்டோபர் 2025 4:00:38 PM (IST)

இந்திய கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு: பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு
வியாழன் 30, அக்டோபர் 2025 12:10:35 PM (IST)

ரபேல் போர் விமானத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பயணம் மறக்க முடியாத அனுபவம்: ஜனாதிபதி மகிழ்ச்சி!
வியாழன் 30, அக்டோபர் 2025 8:20:13 AM (IST)


.gif)