» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
படகில் போட்டோ ஷூட் : மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக டி.வி நடிகை கைது!
திங்கள் 13, செப்டம்பர் 2021 10:58:54 AM (IST)
கேரளத்தில் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலுக்கு விரதமிருக்கும் பக்தர்கள் மட்டும் செல்லும் படகில் போட்டோ ஷூட் நடத்திய டி.வி நடிகை கைது செய்யப்பட்டார்.

கடுமையாக விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே இப்படகில் செல்ல முடியும். இது ‘பள்ளி ஓடம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் படகில் ஏறுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள டி.வி நடிகை நிமிஷா இப்படகில் ஏறி போட்டோ ஷூட் நடத்தினார். காலில் ஷூ மற்றும் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் அணிந்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நிமிஷா, தனக்கு இதன் பாரம்பரிய பெருமை தெரியாது என்று கூறி மன்னிப்பு கேட்டார்.
இதற்கிடையே மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி, ஆரன்முளா கோயில் நிர்வாகிகள் ஆரன்முளா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நிமிஷா மற்றும் அவருக்கு உதவி செய்த உன்னி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பிறகு விசாரணைக்காக நிமிஷா, உன்னி இருவரும் ஆரன்முளா காவல் நிலையத்தில் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
