» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா-வங்கதேசம் இடையே 56 ஆண்டுகளாக மூடப்பட்ட வழித்தடத்தில் சரக்கு ரயில் சேவை!

திங்கள் 2, ஆகஸ்ட் 2021 8:47:00 AM (IST)

இந்தியா-வங்கதேசம் இடையே 56 ஆண்டுகளாக மூடப்பட்ட வழித்தடத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது.

இந்தியா-வங்கதேசம் இடையே உள்ள 5 ரயில் வழித்தடங்களில் ஹல்டிபாரி-சிலாஹடி வழித்தடமும் ஒன்றாகும். இது, கொல்கத்தா-சிலிகுரி இடையிலான அகல பாதையின் ஒரு அங்கமாக உள்ளது. பிரிவினைக்கு பிறகும் நீடித்த ரயில் போக்குவரத்து, கடந்த 1965-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி, இந்த வழித்தடத்தை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி காட்சி மூலம் மீண்டும் திறந்து வைத்தனர். 

இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக, ரயில் போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், 56 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அப்பாதையில் ஒரு சரக்கு ரயில் சென்றது. நேற்று முன்தினம் மேற்கு வங்கத்தின் டம்டிம் ரயில் நிலையத்தில் இருந்து 40 வேகன்களில் 2 ஆயிரத்து 500 டன் கற்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் புறப்பட்டது. நேற்று பகல் 1.30 மணியளவில், வங்கதேசத்தின் சிலஹடி ரயில் நிலையத்தை அடைந்தது. அதை வங்கதேச அரசு அதிகாரிகளும், இந்திய தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory